Monday 7 May 2012

பாரதியின் பெருமை

எம்மான் பாரதியின் பாட்டை கேட்டால்
எம்மானும் துள்ளி குதித்தாடும்

அவன் பெயரை உச்சரித்தாலே
பயங்கள் பயந்தோடும்

அமைதிக் கொண்ட பெண்ணும்
அவனின் சக்தி பாடலைக் கேட்டிட்டால்
பராசக்தியாவாள்

அவனின் கண்ணம்மா பாடலைக் கேட்டிட்டால்
காதலில் விருப்பமில்லா இளைஞனுக்கும் காதல் செய்யத்தோன்றும்

அவனின் கண்ணண் பாட்டை கேட்டிட்டால்
நாத்திகனும் ஆத்திகனாவான்

அவனின் சுதந்திர பாடல்களைக்
கேட்டிட்டால்
சுதந்திரத்தின் அருமைத் தெரியும்

அவனின் பாஞ்சாலி சபதத்தை படித்திட்டால் பெண்ணின் பெருமைத் தெரியும்

அவனின் குயில் பாட்டை பாடினால்
கவிதையினுள் தத்துவத்தை உணர இயலும்

மொத்தத்தில் அவன் கவிதைகளை ஆழ்ந்து படித்தோரெல்லாம் கவிஞராவர்.

யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல்,வள்ளுவர்போல்,இளங்கோவைப்போல், பாரதியைப்போல்
பூமிதனில், யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை,வெறும் புகழ்ச்சில்லை.

-------அன்பன்
சக்கரவர்த்தி பாரதி


No comments:

Post a Comment