Sunday 6 May 2012

கல்வியின் தரம் தேய்கிறது

பௌர்ணமி போன்று ஒளி வீச வேண்டிய கல்வி அமாவாசை போன்று ஒளி மங்கியுள்ளது.ஞானத்தை பெறுவதற்காக கல்வி கற்பது போய் வெறும் வேலைக்கு உதவுவதாக மட்டுமே இக்காலக்கல்வி கற்பிக்கப்படுகிறது.மதிப்பெண்கள் பெறுபவரெல்லாம் நன்றாய் வாழப்போகிறவர்களாம்,மதிப்பெண் பெறமுடியாது போனவரெல்லாம் முட்டாள்களாம்.
ஒருவனின் செயல்திறனை நல்வழியில் ஊக்குவிப்பதற்கு கல்வி பயன்பட வேண்டுமேயன்றி அவன் மனனம் செய்யும் திறனை ஊக்குவிப்பதற்கல்ல.
இதனை உணர்ந்து அரசும் தனியார் பள்ளிகளும் என்று சரியான கல்வியளிக்கிறதோ அன்றுதான் நிலையான பௌர்ணமி மாணவர்களின் வாழ்வில் பிரகாசிக்கும்.


No comments:

Post a Comment